எண்ணங்கள் அழகானால்...

Saturday, April 25, 2009

மரியாதை (திரைப்பட விமர்சனம்)

மரியாதை (திரைப்பட விமர்சனம்)


இயக்குனர் விக்ரமனின் படங்கள் என்றாலே விரும்பி பார்க்கும் செண்டிமென்ட் ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால் படம் வெளியான அன்று இரவே படத்திற்கு சென்றுவிட்டேன், திரையரங்கம் நிரம்பியிருந்தது குடும்பத்துடன் வந்திருந்தவர்களே அதிகம் இருந்தனர்,

அப்பாவைத்த பிச்சை என்றபெயர் பிடிக்காததால் வேறு பெயர் சொல்லி கூப்பிட சொல்கிறான்,சிறுவன் , அவன் விருப்பப்படி அவன் சொன்ன பெயரிலேயே பள்ளியிலும் சேர்க்கிறார் அப்பா, நண்பர்களுடன் சேர்ந்து மகன் சிகரெட் பிடிப்பது தெரியவரும் போது என்மகன் அப்படி செய்யமாட்டான் என் று நம்பிக்கையோடு கூறுகிறார் அப்பா, . அதைக்கேட்ட மகன் அப்பாவின் நம்பிக்கைகாகவே புகை பழக்கத்தை விடுகிறான், அடுத்த நாள் தேர்வை வைத்துக்கொண்டு இரவு சினிமா பார்ர்கும் ஆர்வத்தில் இருக்கும் மகனிடம் சினிமாவை நினைத்துக்கொண்டே சரியாக படிக்காமல் இருப்பதைவிட போய் பார்த்துவிட்டு வந்து மனம் ஒன்றி படி என பணம் கொடுத்து அனுப்புகிறார் அப்பா, மேல் படிப்புக்கு முயற்சிக்கும் போதும் உனக்கு என்ன விருப்பமோ அதையே படி என மகனின் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதிக்கிறார் அப்பா,

"குழந்தைகளை அதன் போக்கிலேயே வளர்க்க வேண்டும் நம் கண்டிப்புகளையும் விருப்பங்களையும் அவர்கள் மேல் திணிக்கக்கூடாது , குழந்தைகள் தவறுகள் செய்தால் அன்பாக சொல்லி திருத்துங்கள் தண்டிக்காதீர்கள்" என்ற கருத்தை எடுத்துக்கொண்டு அப்பா மகன் செண்டிமண்ட் கதையை தன்னுடைய திரைக்கதை பானியில் வெகு சாமர்த்தியமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் விக்கிரமன்

சாரணமாக வாழும் விஜயகாந்தின் ஏழை குடும்பத்தில் விருந்தாளியாக வந்து தங்கும் மீராஜஸ்மின் விஜயகாந்தை காதலால் சீண்டி பார்க்கிறார் கோபத்தோடு விலகிப்போகிறார் விஜயகாந்த், காரணம் பிளாஸ்பேக்கில் வில்லன் கூட்டணியால் நடிக்கவரும் மீனாவின் பொய்யான காதலை உண்மையென நம்பி அவருடைய கடன் பிரச்சனையை தீர்க்க 5லட்ச ரூபாய்க்காக பத்திரத்தை படிக்காமல் கையெழுத்திட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 150 ஏக்கர் விவசாய நிலத்தை இழந்துவிடுகிறார், இதானால் பணக்கார குடும்பம் ஏழை குடும்பமாகிறது, எப்படி மீண்டும் நல்ல நிலைக்கு வருகிறார் தன் அப்பாவின் பெயரை உயர்த்துகிறார் என்பதே படத்தின் கதை,

அப்பா விஜயகாந்தின் நடிப்பும் அம்மவாக வரும் அம்பிகாவின் நடிப்பும் அளவாக சரியாக பொருந்தி இருக்கிறது, ரமேஷ் கண்ணாவையும் ,அம்பிகாவின் சமையலையும் கிண்டலடித்து அதை மையப்படுத்தியே காமெடியை நகர்த்தியிருக்கிறார்கள், சொல்லி சிரிக்கும்படி இல்லாவிட்டாலும் காட்சிகளை நகர்த்த போதுமானதாக இருக்கிறது, விஜயகாந்தின் தங்கையின் திருமணமும் , அதன் வரதட்சனை பிரச்சனையும் வழக்கமான விக்கிரமன் பாணி, பஞ்ச் டயலாக், திரையை பார்த்து ஆவேசமாக வசனம் பேசுவது என தேவையற்றவை எதையும் திணிக்காமல் நிறைவாக வந்து செல்கிறார் மகன் விஜயகாந்த்(தோற்றத்தில் மட்டும் கொஞ்சம் வயது முதிர்ச்சி தெரிகிறது)

விக்கிரமன் படங்களில் முன்னேற்றத்திற்கு உதராணமாக வரும் , "பெரிய பாடகி, பஸ் கம்பனி, ஊறுகாய் கம்பனி , கிரிக்கெட்வீரர் ,வரிசையில் இந்த படத்தில் "தரிசு நிலத்தில் கிரீன்ஹவுஸ் முறையில் பெரிய அளவில் ரோஜாதோட்டம் அமைத்து பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்தல் " என்ற நம்பும் விதமாக சொல்லியிருப்பது ரசிக்கவைக்கிறது,

விஜயகாந்தின் வீட்டில் மீரா ஜான்மின் தங்குவது ஏன், விஜயகாந்தை சுற்றிவருவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு பிளாஸ்பேக்கில் மீரா மீனாவின்தோழி என்றும் மீனாவின், போலி காதலை எதிர்த்து அவரை மீண்டும் சாதிக்கவைப்பென் என்று சவால் விட்டு விஜயகாந்திடம் வருவதாக் சொல்லியிருக்கிறார் இயக்குநர்,

பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கின்றன "யார் பார்த்தது........." பாடலும் "இன்பமே உந்தன் பேர்..........." நல்ல ஹிட், கடைசி பாடல் (தேவதை தேசத்தில்) படத்தின் வேகத்தை குறைக்கிறது, விஜய் ஆண்டனியின் பின்னனி இசையும் ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவும் படத்திற்கு அழகு சேர்க்கின்றன

யார் என்ன பேசினாலும் அதை மற்றவர்கள் ஒட்டு கேட்டு உருகுவது, எல்லோரும் அதிக உதவிமனப்பான்மை கொண்டவர்களாகவும் நல்லவர்களுமாகவே இருப்பது , போன்றவைகள் நடைமுறை வாழ்க்கைக்கு லாஜிக் இடித்தாலும் பாசிட்டிவ் சிந்தனைகளை சொல்லுவதற்கு பொருத்தமானதாகவே இருக்கிறது

மனைவி என்றால் நன்றாக சமைத்துப்போடவேண்டும் என்ற கட்டாயமில்லை, அதற்கு வேலைக்காரியே போதுமே சுக துக்கங்களில் சரிசமமாய் பங்கெடுத்தாலே போதும்" என்பது போன்ற பல இடங்களில் வரும் பாசிட்டிவ் வசனங்களில் விக்ரமன் உயர்ந்து நிற்கிறார், குறிப்பாகா கடைசி காட்சியில் சாதனையாளராகி மகன் விஜயகாந்த் பேசும் வசனங்கள்,

"இரட்டை அர்த்த வசனங்கள்," ரத்தம் தெறிக்கும் வன்முறை, "குலுக்கல் குத்துப்பாட்டுகள்" என எதுவும் இல்லாமல் குடும்பத்துடன்அமர்ந்து பார்க்கவும், நம்முள் இருக்கும் பாசிட்டிவ் சிந்தனைகளை தூண்டிவிடவும் இதுபோன்ற படங்கள் வ்ரவேற்கத் தகுந்தவை! விக்கிரமன் போன்றவர்கள் பாராட்டத்தகுந்தவர்கள்,

"மரியாதை"தாராளமாக தரலாம்

Saturday, March 21, 2009

இன்னும் நீ என்...




இன்னும் நீ என்...

உன்னைக்
காதலித்துவிடுவேனோ?
என்கிற பயத்தில்
ந‌ம் நட்பு வட்டத்திலிருந்து
விலகிச்செல்கிறாய்!

உன்
புரிதலற்ற
விலகுதலையும்

புன்னகையுடன்
சகித்துக்கொள்கிறேன்!

இன்னும் நீ

என் "தோழி" என்பதால்

‍‍


--நம்பிக்கைபாண்டியன்

Sunday, December 07, 2008

கவிதை-2




Thursday, October 02, 2008

மழைநாட்க‌ள்!





Monday, September 22, 2008

உதவி!

(சிறுகதை ~நம்பிக்கைபாண்டியன்)

பாலாவுடன் பேசிகொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்களை நோக்கி ஓடி வந்த செல்வா "டேய் மச்சான் அவசரமா ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும்! நாளை தந்துவிடுகிறேன்" என்றான் பாலாவிடம்!

பாலாவோ சிறிதும் யோசிக்காமல் "மாதக்கடைசி ஆகிவிட்டது என்னிடமும் பணம் இல்லை"என்றான், அது பொய் என்பதை தெரிந்து கொண்டவனாய் முகத்தை சுருக்கி சலிப்பாய் பார்த்தபடி" பரவாயில்லைடா" என்றபடி நகர்ந்தான் செல்வா!


பாலா அப்படி சொன்னது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்த‌து! வசதியில் சுமாரான குடும்பம்தான் அவனுடையது! ஆனால் வகுப்பில் பாலா நன்றாக படிக்கும் மாணவன், அவன் வீடு இருக்கும் பகுதியில் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து ப‌த்தாம் வகுப்பு மற்றும் ப‌னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் நடத்துகிறான்,நிறைய மாணவர்கள் படிப்பதால் நல்ல வருமானம் வருகிறது அதனால் எப்போதும் பாலவிடம் பணம் இருக்கும்!நான் கூட ஒருமுறை அவசிய செலவிற்கு பாலவிடம்தான் உதவிக்கு நின்றிருக்கிறேன், மறுக்காமல் செய்திருக்கிறான்!


"ஏண்டா பணம் இல்லையென்று சொன்னாய்" என்று கேட்க நினைத்தேன் ஆனாலும் "அவன் பணத்தை அவன் என்ன வேண்டுமானலும் செய்யலாம் நாம் கேள்வி கேட்பது சரியல்ல! எனற எண்ணம் தடுக்கவே கேட்கவில்லை! இருவரும் வகுப்பறைக்குள் நுழைந்தோம்!


வெளியூரிலிருந்து வந்து கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி படிக்கும் லிங்கம் முன் பெஞ்ச்சில் தலைவைத்து சாய்ந்து படுத்தபடி அமர்ந்திருந்தான் !

"என்னடா மச்சான் சாப்பிட போகவில்லையா இன்னும் இங்கே இருக்கிறாய்"என்றேன்,


" பசியில்லைடா அதனால்தான் போகவில்லை" என்றான் லிங்கம்,


"பசிக்கவில்லையா? சாப்பிட பண‌மில்லையா உண்மையை சொல்" என்றான் பாலா!


லிங்கம் தயங்கிய படியே" இன்று தேதி 31 ஆச்சுடா, ஊரில் இருந்து அப்பா வர 2 நாள் ஆகும்!அதானால்தான் செலவை குறைத்துவிட்டேன்!காலையில் லேட்டாகத்தான் சாப்பிட்டேன்!ராத்திரி வேகமா சாப்பிட்டால் பசி தெரியாது" என்றான்.


சட்டென்று தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் ஒன்றை எடுத்து அவனது சட்டைப்பையில் திணித்து" முதலில் போய் சப்பிட்டு வா" என்றான் பாலா.

தயங்கியவனின் தோள்களை பிடித்து வகுப்பறையின் வாசல் வரை தள்ளிச்சென்று "நேரமாகிறது வேகமாக‌ போய் சப்பிட்டு வா"என்றான்.


பாலவின் செயல் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று முன் செல்வா 50 ரூபாய் கேட்டபோது இல்லை என்றவன், இப்போது லிங்கம் கேட்காமலேயே 100 ரூபாய் கொடுத்தனுப்புகிறான்.என்ன காரணம்? முதலில் தயங்கினாலும் நண்பன் என்ற உரிமையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதை பாலவிடம் கேட்டுவிட்டேன்.


மெலிதாய் சிரித்துவிட்டு " செல்வா என்னிடம் பணம் கேட்ட போதும் என்னிடம் பணம் இருந்தது, ஆனால் அவன் எதற்காக பணம் கேட்டான் தெரியுமா? நம் வகுப்பில் சில நண்பர்கள் சேர்ந்து இன்று மதியக் காட்சிக்கு திரைப்படம் பார்க்க செல்கிறார்கள்!அத‌ற்கான‌ ப‌ண‌ப்ப‌ற்றாக்குறைக்கு என்னிட‌ம் வ‌ந்தான், நான் ம‌றுத்துவிட்டேன்" ஆனால் லிங்கம் சாப்பிடுவ‌த‌ற்கே ப‌ண‌ம் கேட்க‌ த‌ய‌ங்கி ப‌சியோடு இருந்தான்! அத‌னால்தான் கேட்க‌ம‌லேயே உத‌வி செய்தேன்!


"அடிப்ப‌டைத்தேவைக‌ளுக்காக‌ என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய‌லாம்! ஆனால் அதிக‌ப‌ட்ச‌ தேவைக‌ளுக்காக‌ எந்த‌ உத‌வியும் செய்வ‌தில்லை" என்ற பழக்கம் என‌க்கு எப்போதும் இருக்கிறது! அத‌னால் தான் அப்ப‌டி ந‌ட‌ந்துகொண்டேன் என்ற‌ பாலாவின் கொள்கையும், ந‌ட்பும் என் ம‌ன‌தின் உய‌ர‌த்தில் அமர்ந்திருந்த‌து!

Sunday, September 21, 2008

படக்கவிதை!

ஊருக்கு சென்றவள்!


ஊருக்கு சென்றவள்!

கோலமிடாத
வாசல்!
சுவையற்ற
உணவு!

துவைக்காத
துணிகள்!
துலக்காத
பாத்திரங்கள்!

தூசு படர்ந்த
அறைகள்!
சிதறிக் கிட‌க்கும்
பொருட்கள்!

பசிக்காக குரைக்கும்
வீட்டு நாய்!
நீரின்றி வாடும்
பூச்செடிகள்!
காய்ந்த பூக்களுடன்
கடவுள் புகைப்படங்கள்!

எல்லாம் உணர்த்துகின்றன
ஊருக்குச் சென்ற‌
அம்மாவின் அருமையை!

- நம்பிக்கைபாண்டியன்

Wednesday, August 06, 2008

நட்பு!

லூசு
எருமை
பன்னி
பிராடு
முட்டாள், என‌
என்ன சொல்லி
திட்டினாலும்!
சிரித்துகொண்டேதான்
பதிலளிக்கிறான்!
நண்பன் என்பதால்!

~நம்பிக்கைபாண்டியன்

மழைக்காதல்!

மழை பிடிக்கும்
என்றாலும்
குடைபிடித்து
வ‌ருகிறாய்!
எனைப் பிடிக்கும்
என்றாலும்
காத‌லிக்க
ம‌றுப்ப‌துபோல்!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்